படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி மாதப் பிறப்பையொட்டி கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று திரளான பக்தர்கள் வந்தனர்.
படவேடு ரேணுகாம்பாள்
படவேடு ரேணுகாம்பாள்
Published on

ஆடி மாதப் பிறப்பையொட்டி கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று திரளான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் கோவிலில் வரிசையாக சென்று அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து, ராஜகோபுரம் முன்பு அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.

மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போலீசார், கோவில் நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் இணைந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று பெரும்பாலான பக்தர்கள் முகக் கவசம் அணியவில்லை. சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிப்பதை கோவில் நிர்வாகமும் போலீசாரும் உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com