பூண்டி மாதா பேராலயத்தில் சிறு சப்பர பவனி

பூண்டி மாதா பேராலய பெருவிழாவில் இன்று(சனிக்கிழமை) தேர்பவனி நடைபெறுவதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்தில் குவிந்துள்ளனர்.
பூண்டி மாதா
பூண்டி மாதா
Published on

திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், பல்வேறு அருட்தந்தையர்களால் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

விழாவில் நேற்று மாலை சிறு சப்பரபவனி நடந்தது. தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெற்றது. மரியா -பாவிகளின் அடைக்கலம் என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய அதிபர் இருதயராஜ் அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பூண்டி பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று(சனிக்கிழமை)  தேர்பவனி நடைபெறுவதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்தில் குவிந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை  பேராலய அதிபர் பாக்கிய சாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன்,  உதவி  பங்கு தந்தையர்கள் ஜான்சன், இனிகோ, ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com