உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படும்: ரஷியா, சீனா கூட்டறிக்கை

ரஷியா, சீன அதிபர்கள் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர்.அப்போது, உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு காணப்படும் என்றனர்.
உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படும்: ரஷியா, சீனா கூட்டறிக்கை
Published on

பீஜிங்:

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகப் பேசினர். இருதரப்பு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்நிலையில் அதிபர் புதின், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாக பேட்டியளித்தனர். கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சீனா, ரஷியா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது.

எங்களுடைய உள்நாட்டு விவகாரங்கள், நட்பு மற்றும் இறையாண்மை மீதான மூன்றாம் நாடுகளின் தலையீட்டை எதிர்க்கிறோம்.

உக்ரைன் மீதான போருக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com