இன்று உலக தேங்காய் தினம்.. ஏன், எதற்கு தெரியுமா?

சத்துக்கள் அதிகம் நிறைந்த நீராகாரமாக தேங்காய் விளங்குகிறது. சரும பராமரிப்பு, பாதுகாப்புக்கு தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
Coconut
Published on

செப்டம்பர் 2- இன்று உலக தேங்காய் தினம். ஒவ்வொரு நாளும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் தேங்காய்களின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

விவசாயத்தில் மிக முக்கிய பங்கு வகிகக்கும் தேங்காய் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும். உலகளவில் வெப்பமண்டல பகுதிகளில் அதிக வருவாய் ஈட்டிக் கொடுப்பதிலே தேங்காய் மிகமுக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தேங்காய்களின் முக்கியத்துவம், அவற்றால் நமக்கு கிடைக்கும் பலன்களை நினைவுகூற இந்த நாள் பெரிதும் உதவுகிறது.

எவ்வித கலப்பும் இன்றி சுத்தமான மற்றும் சத்துக்கள் அதிகம் நிறைந்த நீராகாரமாக தேங்காய்கள் விளங்குகின்றன. இதுதவிர சரும பராமரிப்பு, பாதுகாப்புக்கு தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், டயட் இருப்பவர்கள் உடலில் புத்துணர்ச்சியை பெற விரும்புவோர் முதலில் நாடுவது தேங்காயாகவே இருக்கிறது.

கலாச்சாரம், ஊட்டச்சத்து மற்றும் பொருளாதர மேம்பாடு என தேங்காய் பற்றிய விழிப்புணர்வை உலக தேங்காய் தினத்தில் ஏற்படுத்துவோம். இந்நாளில் தென்னை விவசாயம், விளைச்சலில் நிலையான நடைமுறைகளை வலியுறுத்துவோம்.

தேங்காயில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. உடலில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொழுப்புகள் தேங்காயில் உள்ளன. எலக்ட்ரோலைட் நிறைந்த இயற்கை பானமாக தேங்காய் நீர் விளங்குகிறது.

தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. தேங்காய் எண்ணெய் மிகவும் பிரபலமான இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் ஹேர் கண்டிஷனர் எனலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com