search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் 2 பேர் சுட்டுக்கொலை
    X

    அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் 2 பேர் சுட்டுக்கொலை

    • அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணம் டக்ளஸ் காண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
    • விருந்தில் கலந்து கொண்டர்கள் யாராவது தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதுகின்றனர்.

    அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணம் டக்ளஸ் காண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் தனது பேத்தி 16 வயதை எட்டியதால் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்தில் இளைஞர்கள்- இளம் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சில இளைஞர்கள் போதைப் பொருள் உட்கொண்டதாக கூறப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடந்த இந்த விருந்தின் போது திடீரென ஒருவர் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியில் விருந்தில் பங்ககேற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. விருந்தில் கலந்து கொண்டர்கள் யாராவது தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதுகின்றனர். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×