search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சூடானில் ராணுவம்-துணை ராணுவம் மோதலில் இந்தியர் ஒருவர் பலி
    X

    சூடானில் ராணுவம்-துணை ராணுவம் மோதலில் இந்தியர் ஒருவர் பலி

    • ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர்.
    • சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஹர்டோம்:

    சூடானில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

    தால் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆல்பெர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் உயிரிழந்துள்ளார்.

    இதையடுத்து சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×