search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டையில் அதிகாரி உள்பட 19 பேர் பலி
    X

    ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டையில் அதிகாரி உள்பட 19 பேர் பலி

    • ஈரானில் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலுகிஸ்தான் மாகாணங்களில் இயங்கி வரும் பயங்கரவாத கும்பல் சட்ட விரோத போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பயங்கரவாத கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    ஈரானில் ஹிஜாப் விவகாரம் சூடுபிடித்து உள்ளது. அங்கு பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஈரான்-பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள ஒரு போலீஸ் நிலையைத்தில் மர்மகும்பல் திடீரென தாக்குதல் நடத்தினார்கள், அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதையடுத்து போலீசாரும் அவர்களை நோக்கி திருப்பி சுட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் உளவுத்துறை அதிகாரி கர்னல் அலிமவுசலி உள்பட 19 பேர் இறந்ததாக ஈரான் தெரிவித்து உள்ளது. இந்த சண்டையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை.

    ஈரானில் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலுகிஸ்தான் மாகாணங்களில் இயங்கி வரும் பயங்கரவாத கும்பல் சட்ட விரோத போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    இதனால் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஈரானில் ஏற்கனவே ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் இதற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மந்தம் எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×