search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மோடியை விட இம்ரான்கான் நாட்டுக்கு எதிரானவர்- பாக்.மந்திரி பேச்சால் சர்ச்சை
    X

    மோடியை விட இம்ரான்கான் நாட்டுக்கு எதிரானவர்- பாக்.மந்திரி பேச்சால் சர்ச்சை

    • இந்திய பிரதமர் மோடியை விட பாகிஸ்தானுக்கு இம்ரான்கான் ஆபத்தானவர்.
    • இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் மந்திரி விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். அவர் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த மாதம் இம்ரான்கான் கோர்ட்டுக்கு வந்த போது அவரை துணை ராணுவம் கைது செய்தது. இதனால் நாடுமுழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    கலவரத்தை தூண்டியதால் இம்ரான்கான் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

    இந்தநிலையில் இந்திய பிரதமர் மோடியை விட இம்ரான்கான் பாகிஸ்தானுக்கு ஆபத்தானவர் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி குவாஜா ஆசீப் கூறி உள்ளார்.

    தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வெளிநாட்டு எதிரி பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தானில் பிறந்து, அந்த தேசத்தில் இருக்கும் (இந்தியா) எதிரியை விட பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எதிரியை மக்கள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை.

    இந்திய பிரதமர் மோடியை விட பாகிஸ்தானுக்கு இம்ரான்கான் ஆபத்தானவர். இதை மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர் நம்மிடையே இருக்கிறார். இந்த எதிரி உண்மையில் நமது பாதுகாப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார். இதற்கு மே 9-ந்தேதி நடந்த கலவரமே சான்றாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் மந்திரி விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×