பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

கனமழையில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சாவ் பாவ்லா மாநில கவர்னர் ஜோவ் டோரியோ தெரிவித்தார்.
பிரேசில் கனமழை
பிரேசில் கனமழை
Published on

ரியோ டி ஜெனிரோ:

பிரேசில் நாட்டில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

சாவ்பாவ்லா மாநிலத்தில் பெய்த மழையினால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்டமாக தகவல் வெளியானது. 

தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com