சிரியா: குவியல் குவியலாக சடலங்கள்.. சாலையில் நிர்வாணமாக்கப்படும் பெண்கள் - பகீர் தகவல்கள்

ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்திலும், உயர் பதவிகளிலும் இருந்து வந்தார்கள்.பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா: குவியல் குவியலாக சடலங்கள்.. சாலையில் நிர்வாணமாக்கப்படும் பெண்கள் - பகீர் தகவல்கள்
Published on

சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) இன் இடைக்கால அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளுக்கும் முன்னாள் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

கடந்த வியாழன் முதல் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அந்நாட்டின் சிறுபான்மையினரான அலாவைட்  பிரிவை பின்பற்றுபவர்கள் பலரை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்திலும், உயர் பதவிகளிலும் இருந்து வந்தார்கள்.

எனவே மூன்று மாதங்களுக்கு ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அலாவைட்டுகள் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிரியாவின் அலாவைட்கள் அதிகம் இருக்கும் கடலோர மாகாணமான லடாகியாவில் தற்போது வன்முறை வெறியாட்டங்கள் வருகின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுதப் படையைச் சேர்ந்த 148 பேரும் இந்த உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் அலாவைட் சிறுபான்மையினர் என்று கூறப்படுகிறது.

வன்முறையைக் கட்டுப்படுத்த, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளைப் பாதுகாப்புப் படையினர் மூடிவிட்டனர். கண்ணில் படுபவர்களை அரசு படைகள் மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொல்வதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எங்கும் சடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகிறது என்றும் வன்முறையின் போது நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்தும் அங்கிருந்தவர்கள் அசோசியேட்டட் பிரஸ் (AP) ஊடகத்திடம் விவரித்துள்ளனர்.

அங்கு பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாக அசோசியேட் பிரஸ் பேட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று பனியாஸ். இங்கு சாலைகளிலும் கட்டிடங்களின் கூரைகளிலும் இறந்த உடல்கள் கிடந்தன. துப்பாக்கி ஏந்தியவர்கள் அங்கிருந்தவர்களை உடலை புதைப்பதைத் தடுத்தனர் என்று பேட்டியளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அலாவைட் கிராமங்களில் வசிப்பவர்கள், தங்கள் சமூகத்தில் பலரின் வீடுகள் சூறையாடப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அசோசியேட் பிரஸ் அறிக்கை தெரிவிகிறது.

மக்கள் தங்கள் வீடுகளும் கார்களும் எரிவதைக் கண்டதும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் உயிர் பிழைக்க முடிந்தது, பலர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் என்று பேட்டியளித்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com