search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிடிவாதத்தை நிறுத்தவும்: இந்தியாவிடம் கடன் நிவாரணம் கேட்கும் மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அறிவுரை
    X

    பிடிவாதத்தை நிறுத்தவும்: இந்தியாவிடம் கடன் நிவாரணம் கேட்கும் மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அறிவுரை

    • மாலத்தீவின் புதிய அதிபர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
    • இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியே நடவடிக்கை எடுத்தார்.

    மாலத்தீவு அதிபராக முகமது முய்வு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர் எனப் பார்க்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என முகமது முய்வு கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், முதலில் பிடிவாதமாக இருப்பதை நிறுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இப்ராஹிம் முகமது சோலிஹ் கூறுகையில் "மாலத்தீவு அதிபர் முகமது முய்வு இந்தியாவிடம் கடன் சீரமைப்பு கேட்க விரும்புகிறார். ஆனால், நிதி சவால்கள் இநதியாவிடம் வாங்கிய கடன் காரணமாக ஏற்பட்டதில்லை.

    எனினும், நம்முடைய அண்டை நாடுகள் உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாம் பிடிவாதத்தை கட்டாயம் நிறுத்த வேண்டம். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் காரணமாக ஏராளமானோர்கள் நமக்கு உதவிய செய்ய முடியும். ஆனால் முய்சு சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. முய்வு அரசு தற்போதுதான் நிலைமை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர் என நினைக்கிறேன்" என்றார்.

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முய்சு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வந்த நிலையில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    Next Story
    ×