தைவான் தலைநகரில் கத்திக்குத்து தாக்குதல்.. 3 பேர் பலி - பலர் படுகாயம் - பரபரப்பு வீடியோ

தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதோடு கத்தியை எடுத்து அவ்வழியே சென்றவர்களை தாக்கியுள்ளார்.ஒரு கட்டத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்துள்ளார்.
தைவான் தலைநகரில் கத்திக்குத்து தாக்குதல்.. 3 பேர் பலி - பலர் படுகாயம் -  பரபரப்பு வீடியோ
Published on

ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

நகரின் பிரதான ரெயில் நிலையத்திற்கு அருகே சுரங்கப்பாதையில் நபர் ஒருவர் புகை குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறி தெருவுக்குள் நுழைந்துள்ளார்.

தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதோடு கத்தியை எடுத்து அவ்வழியே சென்றவர்களை தாக்கியுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3 பேர் இதுவரை உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்தியவரை போலீசார் துரத்திச் சென்றனர். அந்த நபர் போலீசிடம் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஒரு கட்டத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த நபரின் பெயர் சாங் என்றும் அவருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com