என் மலர்
உலகம்

ஒன்றாக முன்னேற்றம் நிறைந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்: கானா பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
- பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பெற ஆப்பிரிக்காவின் வளர்ச்சி கட்டமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
- ஒரு வலிமையான இந்தியா, மிகவும் நிலையான மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிக்கும்.
இந்திய பிரதமர் மோடி கானா சென்றுள்ளார். இந்திய நேரப்படி இன்று மதியம் கானா பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
* மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம்.
* உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.
* எங்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஒரு அமைப்பு அல்ல. அது எங்கள் அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதியாகும்.
* எனக்கு வழங்கப்பட்ட கானா தேசிய விருதை இரு நாடுகளையும் இணைக்கும் நீடித்த நட்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.
* நமது உறவுகளை விரிவான கூட்டாண்மையாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
* இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஆர்டர் வேகமாக மாறி வருகிறது.
* மாறிவரும் சூழ்நிலைகள் உலகளாவிய நிர்வாகத்தில் நம்பகமான மற்றும் பயனுள்ள சீர்திருத்தங்களைக் கோருகின்றன.
* உலகளாவிய தெற்கிற்கு குரல் கொடுக்காமல் முன்னேற்றம் வராது.
* 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.
* ஒரு வலிமையான இந்தியா, மிகவும் நிலையான மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிக்கும்.
* பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பெற ஆப்பிரிக்காவின் வளர்ச்சி கட்டமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
* ஒன்றாக, வாக்குறுதிகள் மற்றும் முன்னேற்றம் நிறைந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.