search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்
    X

    ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

    • ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.
    • திமிங்கலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

    ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில்

    160 பைலட் திமிங்கலங்கள் இன்று காலை கரை ஒதுங்கியுள்ளன. ஆபத்தான நிலையில் இருந்த 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சு விடமுடியாமல் இறந்தன.

    மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு கடலில்க்ஷ விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு திமிங்கலம் கரையில் தவறுதலாக மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கலம் வரிசையாக கரையில் சிக்கி இருக்கலாம் என அந்நாட்டில் கடல்வாழ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×