search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சுதந்திர பாலஸ்தீனத்தில் காசா ஒரு பகுதியாக வேண்டும் - எர்டோகன் திட்டவட்டம்
    X

    சுதந்திர பாலஸ்தீனத்தில் காசா ஒரு பகுதியாக வேண்டும் - எர்டோகன் திட்டவட்டம்

    • எர்டோகன் தலைமையில் துருக்கி, ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளது
    • 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும் என்றார் எர்டோகன்

    தென்கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே அமைந்துள்ள அரபு நாடு துருக்கி (Turkey). இதன் தலைநகரம் அங்காரா.

    துருக்கியின் அதிபராக ரிசெப் டாய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) 2014லிருந்து பதவியில் உள்ளார். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிப்பவர் எர்டோகன்.

    நேற்று இந்த போர் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறோம். இந்த போர் முடிந்ததும் காசாவில் அமைதியையும், அது ஒரு சுதந்திர பாலஸ்தீனதின் ஒரு பகுதியாகவும் இருப்பதை பார்க்க விரும்புகிறோம். கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டு 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும். பாலஸ்தீனர்களின் வாழ்வை இருள செய்யும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது குறித்த பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஈடுபட்டாலும், நேதன்யாகுவை ஆதரிக்க போவதில்லை. இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இஸ்ரேலை பொறுப்பாக்குவோம். இஸ்ரேலை ஆதரித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நம்பிக்கையை இழந்து விட்டது.

    இவ்வாறு எர்டோகன் கூறினார்.

    அக்டோபர் 7-ஆம் தேதியிலிருந்து காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 3,826 குழந்தைகள் உட்பட 9,277 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×