search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சோமாலியா நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்
    X

    (கோப்பு படம்)

    சோமாலியா நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்

    • ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.
    • ஓட்டல் நுழைவு வாயில் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல்.

    கிஸ்மாயு:

    சோமாலியா நாட்டின் துறைமுக நகரமான கிஸ்மாயுவில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.மேலும் அந்த ஓட்டலின் நுழைவு வாயில் மீது கார் வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயம் அடைந்தனர். சோமாலியாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

    இது குறித்த தகவல் அறிந்து, அங்கு விரைந்த சோமாலியா பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான பொதுமக்கள் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    Next Story
    ×