ஓமன் அருகே இந்திய கப்பல் மீது தாக்குதல்!

இந்திய மாலுமிகள் அவசர உதவி கோரியுள்ள நிலையில் இந்திய அதிகாரிகளும் இந்திய கடற்படையும் இதில் தலையிட வேண்டும் என்றும் இந்திய முன்னோக்கு மாலுமிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கப்பல்
தாக்குதலுக்கு உள்ளான கப்பல்Indian Ship Attack
Published on

இஸ்ரேல்- ஈரான் மோதல் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஓமன் கடற்கரைக்கு சற்று தொலைவில் இந்தியக் கப்பல் தாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்கப்பலில் பயணித்த 24 இந்திய மாலுமிகளும் அவசர உதவி கோரியுள்ளனர் என்று இந்திய முன்னோக்கு மாலுமிகள் சங்கம் (FSUI) தெரிவித்துள்ளது.

FSUI தங்களது X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்தியக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே இருப்பதாக கூறியதுடன், இந்திய அதிகாரிகளும் இந்திய கடற்படையும் இதில் தலையிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் தாக்குதலின் தன்மை மற்றும் அதில் இருந்தவர்கள் நிலை குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com