H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்திய டிரம்ப் உத்தரவை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

டிரம்ப் நிர்வாகத்திற்கு இவ்வளவு பெரிய தொகையைக் கட்டணமாக விதிக்க எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை
H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்திய டிரம்ப் உத்தரவை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
Published on

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான H-1B விசா கட்டணத்தை 100,000 டாலர் (சுமார் ரூ.83 லட்சம்) என்ற அளவில் உயர்த்தியிருந்தது.

அமெரிக்கர்களுக்கு உள்நாட்டில் அதிக வேலைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வு அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு, குறிப்பாக ஆயிரக்கணக்கான இந்திய மென்பொருள் ஊழியர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

இவ்வளவு பெரிய தொகையை செலுத்த நேரிட்டால், திறமையான மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்களை வேலைக்கு எடுக்க முடியாது என்று கூறி 20 அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில், டிரம்ப் நிர்வாகம் விதித்த கட்டண உயர்வை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் மாசசூசெட்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் நேற்று வழங்கிய தீர்ப்பில், "அமெரிக்க நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் இல்லாமல், H-1B மீது இவ்வளவு பெரிய தொகையை விதிப்பது கட்டணம் அல்ல; அது வரி விதிப்பிற்குச் சமம். எனவே இந்த அரசாங்கக் கொள்கை சட்டவிரோதமானது.

டிரம்ப் நிர்வாகத்திற்கு இவ்வளவு பெரிய தொகையைக் கட்டணமாக விதிக்க எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை" என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com