வடகொரியா அனுப்பிய குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்

தென் கொரியா, வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.
வடகொரியா அனுப்பிய குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்
Published on

தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு குப்பைகள் நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.

இந்த நிலையில் தென் கொரியாவுக்குள் மீண்டும் குப்பை பலூன் ஏவப்பட்டது. இந்த பலூன் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் விழுந்தது. அந்த குப்பையில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்று தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகொரிய பலூன் தரையிறங்கும் போது அதிபர் யூன் சுக் இயோல் அந்த வளாகத்தில் இருந்தாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.

வட கொரியா ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலூன்களை மிகவும் துல்லியமாக உத்தேசித்துள்ள இடங்களில் தரையிறக்க தொடங்கியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com