search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வெளியுறவுத்துறை மந்திரி எகிப்து பயணம் - மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்
    X

    வெளியுறவுத்துறை மந்திரி எகிப்து பயணம் - மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றார்.
    • கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வெளியுறவுத்துறை மந்திரி மரியாதை செலுத்தினார்.

    கெய்ரோ:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்குச் சென்றுள்ளார்.

    எகிப்து தலைநகர் கெய்ரோவிற்குச் சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கெய்ரோவின், அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் இன்றைய நாள் தொடங்கி உள்ளது. இது சுதந்திரத்திற்கான காரணத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. அனைவருக்குமான நீதி மற்றும் சமத்துவத்திற்காக பாடுபட அவரது செய்தி உலகை ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 2019-ல் அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×