எப்ஸ்டீன் கோப்புகள்: மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.அதில் ஒரு பெண்ணுடன் அவர் அரை நிர்வாணமாக இருக்கிறார்.
எப்ஸ்டீன் கோப்புகள்: மன்னிப்பு கேட்ட  பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
Published on

அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது.

இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக கடந்தாண்டு வெளியான ஆவணங்களில் அமெரிக்காவுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றது.

இதனால், கடந்த ஆண்டு செப்டம்பரில் பீட்டர் மண்டேல்சனை தூதர் பதவியிலிருந்து நீக்கி பிரதமர் ஸ்டார்மர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் பீட்டர் மண்டேல்சன் தொடர்புடைய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அதில் ஒரு பெண்ணுடன் அவர் அரை நிர்வாணமாக இருக்கிறார்.

இதன்மூலம் எப்ஸ்டீனுடன் ர் பீட்டர் மண்டேல்சன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தது உறுதியாகி உள்ளது.

இதனால் சர்ச்சை தீவிரமடைந்த நிலையில் பீட்டர் மண்டேல்சனுக்கு பதவி வழங்கிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. புதியதாக எப்ஸ்டீனின் கோப்புகள் வெளியானதைத் தொடர்ந்து ஸ்டார்மரின் அரசு கடும் அழுத்ததில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பீட்டர் மண்டேல்சனின் பொய்களை நம்பி அவருக்கு பதவி வழங்கியதாகவும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் இன்று பேசியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com