கராச்சி குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கராச்சி குண்டுவெடிப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாகாண முதல்வர் முராத் அலி ஷா உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு பணி
மீட்பு பணி
Published on

கராச்சி:

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து நேற்று திடீரென குண்டு வெடித்ததுபோன்று சத்தம் கேட்டது. அந்த பாதாள சாக்கடைக்கு மேல் கட்டப்பட்டிருந்த வங்கி கட்டிடம் இடிந்து விழுந்தது. அருகில் உள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன. சாக்கடை கால்வாய் வழியாக செல்லும் எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கி  நேற்று 10 பேர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணியின்போது அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இன்று மதிய நிலவரப்படி பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாகாண முதல்வர் முராத் அலி ஷா உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பயங்கரவாத தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com