search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தென் ஆப்பிரிக்காவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து விபத்து-  8 பேர் உயிரிழப்பு
    X

    வெடித்து சிதறிய எரிவாயு டேங்கர் லாரி 

    தென் ஆப்பிரிக்காவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து விபத்து- 8 பேர் உயிரிழப்பு

    • படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி.
    • கோர விபத்தால் பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லாரியை நகர்த்த முயன்றபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்தததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

    எனினும் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்தால் அந்த பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. அங்கிருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை உடைந்தது. இரண்டு வீடுகள் மற்றும் பல கார்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அரசு அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×