இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது

முன் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது
Published on

சரக்கு விமானம் ஒன்று அதன் முன் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 விமானம் பின் தரையிறங்கும் கியரை மட்டுமே பயன்படுத்தி தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறி பறந்தது.

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றும் பணியின் போது விமானம் தரையிறங்கிய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com