லிபியாவில் சோகம்: படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 அகதிகள் பலி

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லிபியாவில் சோகம்: படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 அகதிகள் பலி
Published on

கெய்ரோ:

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்தப் பயணத்தின்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், எகிப்தை சேர்ந்த 13 பேர் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக படகில் மத்திய தரைக்கடல் வழியாக நேற்று ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

லிபியா அருகே 60 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படகில் பயணித்த 12 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த லிபியா கடற்படையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு நபரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த 12 அகதிகளின் உடல்களை மீட்டனர். இதுதொடர்பாக லிபியா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com