மோசடி புகாரில் வின் டிவி தேவநாதன் கைது

மயிலாப்பூர் இந்து சுசுவத நிதி லிமிடெட் நிறுவனம் மூலம் நிதி மோசடி புகார்.140 பேர் புகார் அளித்த நிலையில் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வின் டிவி தேவநாதன்
Published on

வின் டிவி உரிமையாளர் தேவநாதன் மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நிதி நிறுவன மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

140-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதி வைத்திருந்ததாகவும், பலர் உறுப்பினராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

ரூ. 50 கோடி வரை மோசடி என எழுந்த புகாரில் வின் டிவி தேவநாதனை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தல் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com