வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 70 அடியை நெருங்கியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது.
வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 70 அடியை நெருங்கியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

கூடலூர்:

கேரள மாநிலம், மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்தது. இதனால் அணைகள், குளம், கண்மாய் உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது. முல்லைப்பெரியாறு, வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்பட அனைத்து நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்தநிலையில் அடுத்த சில நாட்களுக்கு தேனி மாவட்டம் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்று மாலை முதல் மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வைகை அணை நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம், கூடலூர், கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2233 கனஅடிநீர் வந்தது. நீர்மட்டமும் 69.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டும்போது தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

எனவே அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஆற்றைக்கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது.ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1284 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 73.54 கனஅடியாகும்.

பெரியாறு 49, தேக்கடி 71.2, கூடலூர் 7.6, உத்தமபாளையம் 12.6, சண்முகாநதி அணை 14.2, போடி 3, வைகை அணை 0.4 , மஞ்சளாறு 9 , சோத்துப்பாறை 17, பெரியகுளம் 12, வீரபாண்டி 9.6, அரண்மனைப்புதூர் 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com