

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற சூட்கேஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சூட்கேஸை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
பயணிகள் யாரேனும் தெரியாமல் விட்டுச்சென்ற உடைமையா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.