சென்னை மத்திய குற்றப்பிரிவில் மோசடி வழக்குகளில் 450 பவுன் நகைகள் மீட்பு- 2 பெண்கள் கைது

பணம்-நகைகள் இன்று கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. சரண்யா, பிரியா ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் மோசடி வழக்குகளில் 450 பவுன் நகைகள் மீட்பு- 2 பெண்கள் கைது
Published on

சென்னை:

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் 2 வழக்குகளில் 450 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 லட்சத்தும் மேல் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம்-நகைகள் இன்று கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பார்வையிட்டார்.

ஏற்கனவே போடப்பட்ட பழைய வழக்கில் 250 பவுன் நகைகளும் தற்போது போடப்பட்டுள்ள வழக்கில் 200 பவுன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. தற்போது போடப்பட்டுள்ள வழக்கு சென்னையில் பருப்பு கம்பெனியில் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்காகும். இந்த வழக்கில் சரண்யா, பிரியா ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவ்யா என்ற கர்ப்பிணி பெண் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com