ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் மோதி சிறுமி பலி

சிறுமி இலக்கியா, வீட்டின் அருகே தொட்டாரெட்டிகுப்பம் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள். பலத்த காயம் அடைந்த இலக்கியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் மோதி சிறுமி பலி
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சி, திடீர் புரம், அன்னாவரம் காலனியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் இலக்கியா (வயது 5). சிறுமி இலக்கியா, வீட்டின் அருகே தொட்டாரெட்டிகுப்பம் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் இலக்கியா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இலக்கியா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்...

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் (44). இவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முகேஷ் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com