நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு- ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.
நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு- ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

ஒகேனக்கல்:

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மழை இல்லாததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது முற்றிலும் நிறுத்தப்பட்டாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 1500 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து சரிவு காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.

தொடர் விடுமுறை காரணமாக இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், கடைவீதியிலும், மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com