வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வேன்கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி
Published on

கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறைக்கு சுற்றுலா வந்தவர்கள், பொள்ளாட்சிக்கு திரும்பியபோது 13வது கொண்டை ஊசி வளைவில் இருந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானநிலையில், எஞ்சியவர்களும் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பொள்ளாட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com