ஃபெஞ்சல் புயல் எதிரொலி - கடலூர் விழுப்புரத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.கனமழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது
ஃபெஞ்சல் புயல் எதிரொலி - கடலூர் விழுப்புரத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.

இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com