சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள்

சொத்து வரி இரண்டு அரையாண்டு வீதம் வசூலிக்கப்படும்.சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13.74 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 2024 - 25ம் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டது.

சொத்து வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை என இரண்டு அரையாண்டு வீதம் வசூலிக்கப்படும்.

முதல் அரையாண்டுக்குள் வரி செலுத்தாமல், அதை, இரண்டாம் அரையாண்டில் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

முதல் அரையாண்டில் செப்டம்பர் 28-ந்தேதி வரை 835 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.

ஆண்டுக்கு 895 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். முதல் அரையாண்டில் 28-ந்தேதி வரை 375 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு முதல் அரையாண்டு வரியை செலுத்த இன்று கடைசி நாள் ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com