எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் கவர்னர்

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கி.நாராயணசாமி வரவேற்புரையாற்றினார்.கல்வி ஒன்றே சமுதாயத்தை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாகும் என நெல்சன் மண்டேலா தெரிவித்து உள்ளார்.
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் கவர்னர்
Published on

சென்னை:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக கவர்னரும், வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவுக்கு தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கி.நாராயணசாமி வரவேற்புரையாற்றினார். 

மருத்துவம் படிப்பில் 6753 மாணவர்களுக்கும், பல் மருத்துவம் 1944 மாணவர்களுக்கு, இந்திய மருத்துவம் 2002 மாணவர்களுக்கும், துணை மருத்துவம் 18,986 மாணவர்கள் என மொத்தமாக 29,865 பேருக்கு இன்று பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில் 73 பேருக்கு தங்க பதக்கம், 21 வெள்ளி பதக்கங்கள், பல்கலைக்கழகம் சார்பில் 48 என மொத்தமாக 179 பேருக்கு இங்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. 10 பதக்கங்களை மாணவி சிந்து பெற்றார். மாணவர் முகமது யாஷின் 9 பதக்கங்களை பெற்றார். கவர்னர் ஆர்.என்.ரவி 134 மாணவர்களுக்கு நேரடியாக வழங்கினார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசும்போது, "பட்டம் முடித்த பிறகும் வாசிப்பு பழக்கத்தை தொடர வேண்டும். கல்வி ஒன்றே சமுதாயத்தை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாகும் என நெல்சன் மண்டேலா தெரிவித்து உள்ளார். ஆகையால் அதேபோன்று கல்வி மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com