தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை: தலைமை தேர்தல் அதிகாரி

குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன. வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை: தலைமை தேர்தல் அதிகாரி
Published on

சென்னை:

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12.55 சதவீத வாக்குப்பதிவும், 11 மணி வரை 24.37 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

சென்னை அண்ணாநகர் உள்பட சில பூத்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும் என்ஜினீயர்கள் விரைந்து சென்று அதை சரி செய்தனர்.

சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் வெயில் காரணமாக உயிரிழந்தனர் என்ற தகவல் வந்தது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விவரம் கேட்டுள்ளோம்.

வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது. எனவே வாக்காளர்கள் முழுமையாக வந்து ஓட்டு போடலாம். ஒரு சில பிரச்சனைக்காக சில இடங்களில் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக தகவல் வந்தது. அவர்களிடம் மாவட்ட அதிகாரி பேசி வருகிறார். ஓட்டு போடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டு உள்ளோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com