சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் - சிவசேனா கோரிக்கை

மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.
திருமுருக தினேஷ்.
திருமுருக தினேஷ்.
Published on

திருப்பூர் :

தமிழக முதல் அமைச்சர் முக. ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழாகொண்டாட்டங்களை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படிவரலாற்று பக்கங்கள், மறந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்துசிறப்பிக்கும் முயற்சிகளை சிவசேனா கட்சி செய்து வருகிறது.அதன்படி நமது தமிழகத்தை சேர்ந்தசுதந்திர போராட்ட வீரரும், தமிழர்களின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சிங்கம் செட்டியாரின் 224 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.ஆங்கிலேயன் கட்டுப்பாட்டில் இருந்தகமுதி கோட்டையில் நெல் உள்ளிட்ட தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதைக் கைப்பறிநம்முடைய மக்களுக்கு விநியோகம் செய்ததால் வெள்ளைக்காரனுடன் மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது‌. அந்த போரின் போது வீர மரணம் அடைந்த சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியாரின் வரலாற்றை புத்தகமாகவெளியிட்டும், மேலும் உலகம் அறியும் வகையில் அவர் வீரமரணம் அடைந்த கமுதியில் மணிமண்டபமும்அமைத்து தரவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com