பாஜக பெண் நிர்வாகி குறித்து அவதூறு- திருச்சி சூர்யா கைது

"இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது"
Trichy Suriya arrested
Published on

பாஜக முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா சிவா, பாஜக முன்னாள் நிர்வாகியான அலிசா அப்துல்லா குறித்தும், அவரது இரட்டை குழந்தைகள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அலிஷா அப்துல்லா கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலிஷா அப்துல்லா தனது புகாரில், திருச்சி சூர்யா தன்னை மிரட்டியதாகவும், அவதூறாக பேசியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

திருச்சி சூர்யா ஏற்கனவே கட்சிக்குள் சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரத்தில் சிக்கி, பாஜகவால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது, அலிஷா அப்துல்லா அளித்துள்ள புதிய புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் திருச்சி சூர்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com