பரதம் ஆடியபடியே பரத முத்திரை, சுலோகங்கள் கூறி தஞ்சை சிறுமி சாதனை

சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள விதுலா ஸ்ரீ.
சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள விதுலா ஸ்ரீ.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் விதுலா ஸ்ரீ (வயது 2).

இந்த நிலையில் சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவரை அவரது பாட்டி அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிகளுக்கு பரத கலை ஆசிரியை ஒருவர் பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த சிறுமி விதுலா ஸ்ரீ தானாகவே பரதம் ஆட தொடங்கி உள்ளார். சிறுமியிடம் இருந்த திறமையை அந்தப் பரத நாட்டிய ஆசிரியை மட்டுமல்லாமல் கோவிலில் கூடி இருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய திறமையா என மனதார பாராட்டினர்.

இதையடுத்து விதுலா ஸ்ரீக்கு திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆட அந்த ஆசிரியை கற்றுக் கொடுத்தார்.

பரத முத்திரைகள், சுலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்று கொடுத்தார். இதனை கற்பூரம் போல் உடனே பற்றிக் கொண்ட சிறுமி விதுலா ஸ்ரீ திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடி கற்றுக் தேர்ந்தார்.

இதனை தொடர்ந்து சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறுமி விதுலாஸ்ரீ பங்கேற்று திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடியபடியே பரதமுத்திரை மற்றும் சுலோகங்கள் கூறி சாதனை படைத்தார்.

சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com