சென்னை கர்னாடிக் ரோட்டரி கிளப்பின் விரிவுரைத் தொடர் சிறப்பாக நடைபெற்றது

கர்னாடிக் ரோட்டரி கிளப் விரிவுரைத் தொடர் சென்னையில் நடைபெற்றது. இதில் உணவுப் பழக்கம், அமைப்புசாரா துறைகளின் வளர்ச்சி பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.
சென்னை கர்னாடிக் ரோட்டரி கிளப்பின் விரிவுரைத் தொடர் சிறப்பாக நடைபெற்றது
Published on

தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை மையமாகக் கொண்டு, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்னாட்டிக் சார்பில் சென்னை விரிவுரைத் தொடரின் (CLS) 7வது சீசனை பெருமையுடன் நடத்தியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு கிளப்-இன் தலைவர் புவனா ரமேஷ், செயலாளர் ஜெயதா ஈஸ்வரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

 இந்த நிகழ்வில் தொழில்துறையை சேர்ந்தவர்களும், புகழ்பெற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உணவகத் தொழில் போக்குகள் மற்றும் அதை சார்ந்துள்ள பலதுறைகள் பற்றிய விவாதம் நடைபெற்றது. இதில் உணவுப் பழக்கம், அமைப்புசாரா துறைகளின் வளர்ச்சி பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடலின் செயல்திறனுள்ள நுண்ணறிவுகளை வழங்கியதுடன், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையில் தமிழகம் உலக அளவில் முன்னணியில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தனர்.

இந்த அமர்வு அர்த்தமுள்ள உரையாடல்களை வளர்ப்பதற்கும், தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ரோட்டரி கிளப்பின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com