வீட்டில் வளர்த்த பச்சை கிளியை வனத்துறையினரிடம் ஒப்படைத்த ஆசிரியர்

காயம்பட்ட நிலையில் பச்சை கிளி ஒன்று ஆசிரியர் பக்தவத்சலம் மடியில் வந்து அமர்ந்துள்ளது. ஆசையாக வளர்த்து வந்த ஆண்டாள் கிளியை ஆசிரியர் பக்தவத்சலம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
 கிளியை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த காட்சி.
 கிளியை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த காட்சி.
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பக்தவத்சலம். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைலாசநாதர் கோவில் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சற்று ஓய்வெடுக்க அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

அப்போது காயம்பட்ட நிலையில் பச்சை கிளி ஒன்று ஆசிரியர் பக்தவத்சலம் மடியில் வந்து அமர்ந்துள்ளது. இதையடுத்து கிளியை மீட்ட ஆசிரியர் அதனை வீட்டில் எடுத்து வந்து சிகிச்சை அளித்தார். மேலும் அதற்கு ஆண்டாள் என பெயரிட்டு ஆசையுடன் வளர்த்தும் வந்தார்.

இதனிடையே கிளியை வீட்டில் வளர்த்துக்கொள்ள அனுமதி கேட்டு சென்னை முதன்மை வனச்சரக அலுவலருக்கு விண்ணப்பித்தார். இந்த தகவலை அறிந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று தாரமங்கலத்தில் உள்ள ஆசிரியர் பக்தவத்சலத்தின் வீட்டிற்கு வந்தனர்.

கிளியை வீட்டில் வளர்க்க அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் கிளியை வனத்தில் விட அரசு ஆணை பிறப்பித்த நகலை காண்பித்தனர். இதனை தொடர்ந்து தான் ஆசையாக வளர்த்து வந்த ஆண்டாள் கிளியை ஆசிரியர் பக்தவத்சலம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com