என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாக்கில் ஆப்ரேசன்.. டாட்டூ ஆர்ட்டிஸ்ட் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்
    X

    நாக்கில் ஆப்ரேசன்.. டாட்டூ ஆர்ட்டிஸ்ட் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்

    • நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை ஹரிஹரன் செய்து வந்தார்.
    • டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சியில், உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.

    இளைஞர்கள், மாணவர்களை ஹரிஹரன் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் இது தொடர்பாக புகார் அளித்து வந்தனர்.

    இதனையடுத்து, டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இவர்களின் மீது 7 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "உடல் உறுப்புகளை மாற்றம் செய்வதற்கான உரிய சான்றிதழை நான் பெறவில்லை. இதை சட்டபூர்வமாக தவறு ஏன்னு சொன்னார்கள். டிஐஜி வருண்குமாரின் ஆலோசனையின்படி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள். இதற்கான முறையான சான்றிதழ் பெறாமல் என்னை போல உடல் உறுப்புகளை மாற்றம் செய்யும் வேலையை யாரும் செய்யாதீர்கள். இல்லையென்றால் என்னைப்போல பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆதலால் இம்மாதிரி யாரும் செய்யாதீர்கள். இனிமேல் இம்மாதிரியான எவ்வித செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன்" என்று ஹரிஹரன் தெரிவித்தார்.

    Next Story
    ×