கடலூர் அருகே திருவந்திபுரம் கோவிலில் நடந்த திருமணங்கள்

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பின்புறம் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன.
திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் முன்பு 50க்கும் மேற்பட்ட திருமணம் நடைபெற்றது
திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் முன்பு 50க்கும் மேற்பட்ட திருமணம் நடைபெற்றது
Published on

கடலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் 117 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 50 பேர் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெறலாம் என தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவையும் தளர்த்தி வழக்கம்போல் கோவில்கள் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று முகூர்த்த நாள் என்பதால் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வந்தன.

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பின்புறம் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன. மேலும் திருவந்திபுரம் சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில்கள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்ததால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மூடப்பட்டு கோவில் முகப்பு பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் மணமக்கள் ஜோடியாக கோவில் முன்பு தங்கள் உறவினர்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் சாலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் முகக்கவசம் அணியாமல் திருமணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் நடைபெறும் திருமணத்தின்போது அவர்கள் உறவினர்கள் பெற்றோர்கள் என 10 பேர் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து திருமண நடைபெற வேண்டும் என எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக திருவந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com