

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து, நெல்லை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர், கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.