பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு நோயாளிடம் தரம் குறித்துக் கேட்டு கொண்டிருந்தார். விஜய் ஆனந்த், கவுன்சிலர்கள் உமாபதி, நல்ல சிவம்,பத்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்
பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
Published on

பொன்னேரி:

பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வதுண்டு. இந்நிலையில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் திடிர் ஆய்வு செய்தனர்.

அப்போது பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையின் கட்டமைப்பு, புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு நோயாளிடம் தரம் குறித்துக் கேட்டிருந்தார்.

பின்னர் உள் நோயாளிகள் பிரிவில் பெண்கள் சிகிச்சை பெற்று வரும் பகுதிக்கு சென்று விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது மாவட்ட சுகாதார துறை துனை இயக்குநர் சேகர், தலைமை மருத்துவர் அசோகன்,பொன்னோரி நகராட்சி ஆனையர் கோபிநாத், நகராட்சி தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், டாக்டர்கள் பெனடிக், விஜய் ஆனந்த், கவுன்சிலர்கள் உமாபதி, நல்ல சிவம்,பத்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com