திருப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு

அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டில் ஈடுபட்ட நபர் வடமாநில வாலிபர் போன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு
Published on

திருப்பூர்:

திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் சந்திப்பில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை உள்ளது. அங்கு கோழிக்கோடு, வடகரை பகுதியை சேர்ந்த முகமது இஜாஸ் என்பவர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இரவு அப்துல் சலாம், முகமது இஜாஸ் ஆகியோர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை முகமது இஜாஸ் கடையை திறக்க சென்றபோது கடையின் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை மதிப்புள்ள புதிய செல்போன்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் உரிமையாளர் அப்துல் சலாம் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது அதிகாலை 2.15 மணிக்கு முககவசம் அணிந்தபடி உள்ளே சென்ற மர்ம ஆசாமி ஒருவர் சாக்குப் பையுடன் உள்ளே சென்று புதிய செல்போன்கள் அனைத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வெளியேறுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபர் வடமாநில வாலிபர் போன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

விலை மதிப்புள்ள செல்போன்களை மட்டும் திருடி இருப்பதால் ஏற்கனவே செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபராக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் கடையின் பூட்டை உடைத்து 55 செல்போன்களை மர்ம ஆசாமி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com