திருவொற்றியூர்-மீஞ்சூர் இடையே சர்வீஸ் சாலையில் தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவொற்றியூர்-மீஞ்சூர் இடையே சர்வீஸ் சாலையில் தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
Published on

பொன்னேரி:

திருெவாற்றியூர்-மீஞ்சூர் இடையே மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

இதனை தடுக்க சர்வீஸ்சாலை பிரியும் இடங்களான கொண்டக்கரை, நாபாளையம், வல்லூர், மணலி புதுநகர், ஆண்டார் மடம் உள்ளிட்ட இடங்களில் சிமெண்டு தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டது.

எனினும் அந்த தடுப்பு கற்களை சிலர் நகர்த்தி விட்டு கனரக வாகனங்களை தற்போது நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com