ஷாம்புக்கு பதில் அழுகிய உருளைக்கிழங்கு- ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண் அதிர்ச்சி

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளுக்கு பணத்தை செலுத்திய பெண், பார்சலை பிரித்தபோது அதில் இருந்து துர்நாற்றம் வீசியது.
ஆன்லைன் ஆர்டர்
ஆன்லைன் ஆர்டர்
Published on

ஈரோடு:

நசியனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஈரோடு ஆசிரியர் காலனியில் நிதி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் ஆன்லைன் ஆப் மூலம் ஷாம்பு ஒன்று வாங்குவதற்கு ஆர்டர் செய்து உள்ளார். ஆர்டரை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பார்சல் அனுப்பியது. அதில் ஷாம்புக்கான தொகை ரூ.330-ஐ பார்சல் கொண்டு வந்த நபரிடம் வழங்கினார் அந்த பெண்.

பின்னர் அவர் பார்சலை பிரித்தபோது கடுமையான துர்நாற்றம் வீசியது. அவர் பார்சலின் உள்ளே பார்த்தபோது அதில் ஷாம்புக்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அழுகிய நிலையில் உருளைக்கிழங்கு ஒன்று இருந்தது. அதைப்பார்த்த பெண் நிதி ஆலோசகர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு புகார் தெரிவித்தும் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com