

இந்நிலையில் இன்று காலை சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வழக்கு தொடர்பாக ஏற்கனவே 90 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக யார் யாருக்கு சம்மன் அனுப்புவது என்பது குறித்தும், எவ்வாறு விசாரணை நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.