திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முருகர் தேர் வெள்ளோட்டம்

அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. சிமண்டு சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முருகர் தேர் வெள்ளோட்டம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற நிலையில் புதிய சாலையில் இன்று காலை 5.30 மணிக்கு முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிமண்டு சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com